8.09.2020

 

மாட்டு வண்டியின் உதிரி பாகங்களின் பெயர்களும் அதன் பயன்களும்...


வண்டி :

முன்பெல்லாம் விவசாயம் செய்பவர்கள் இரண்டு மாடுகளை வண்டி இழுப்பதற்காக கட்டாயமாக வீட்டில் வைத்திருப்பார்கள் . மோட்டார் வாகனங்கள் அதிகம் புழக்கம் இல்லாத காலங்களில் விவசாயிகள் மட்டுமில்லாமல் வணிகர்களும் பெரிதும் பயன்படுத்தி வந்தனர் . இந்த வண்டிக்கு கட்டை வண்டி என்று மற்றொரு பெயரும் உண்டு .

வண்டியானது சுற்று சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது . மாட்டு வண்டிகளின் பயன்பாடு தொன்று தொட்டே நம்மிடையே இருந்து வருகிறது . விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் விளையும் வேளாண் பொருட்களையும் பிற பொருட்களையும் ஏற்றிச் செல்ல அதிகமாக பயன்படுத்தியது மாட்டு வண்டி மட்டுமே . மாட்டு வண்டியில் பயப்படுத்தப் படும் மாடுகள் ஜல்லிக்கட்டிற்கும் பெரிதும் பயன்படுத்த மாட்டார்கள் . ஆனால் சில பகுதிகளில் வண்டி மாடுகளுக்கும் ஜல்லிக்கட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது .

கடையாணி

இரண்டு சங்கரங்களையும் அசினை விட்டு வெளியேற விடாமல் பிடித்துக்கொள்ளும் வண்டியில் உள்ள மைய அச்சு தொடங்கி கடைசியாக உள்ள பகுதியாக இருப்பதால் கடையாணி என்று பெயர் வந்திருக்கலாம் .

அல்லைப்படல்

பொதுவாகப் படல் என்றால் மறைக்க உதவுவது என்று பொருள் . வண்டியின் இரண்டு பக்கவாட்டுகளிலும் பொருட்கள் விழாதவாறு தடுக்கும் பாகத்திற்கு அல்லை படல் என்று பெயர் .

குடம்

ஆரக்கால்களை வட்டை (சக்கரத்தின் வெளிப்பகுதி ) யுடனும் மைய அச்சுடனும் இணைக்கும் பகுதிக்கு பெயர் தான் குடம் .

நுகத்தடி

வண்டியில் பூட்டும் மாடுகளைக் கட்டப் பயன்படும் நீளமான தடிப்பகுதியே இந்த நுகத்தடியாகும் . நுகத்தடியில் மாடுகளை பூட்ட அதன் இரு பாகங்களிலும் இரண்டு துளைகள் இருக்கும் .

வட்டை

வண்டிச் சக்கரத்தின் வெளிப்பகுதியை வடிவமைக்க உதவும் பகுதி தான் வட்டை . ஒரு சக்கரத்தினை வடிவமைக்க ஆறு ஆறு வட்டைகள் தேவை . இந்த வட்டையானது தேக்கு மரத்தால் செய்யப்பட்டு இருக்கும் .

சவாரித்தப்பை

மாடுகள் சவாரி செய்ய ஏர்க்காலுடன் இணைக்கப்பட்டு இருக்கும் தப்பை . இது ஆட்கள் சவாரி செய்ய வசதியாக உருவாக்கப்பட்டது .

பட்டா

சக்கரத்தின் நுனிப்பகுதியில் இரும்பினைக் கொண்டு சக்கரத்தைச் சுற்றிலும் அதன் மேற்புறம் தேய்ந்து போகாதவாறும் சேதமடையாமலும் பாதுகாக்க பட்டா அமைக்கப்பட்டிருக்கும் .

இருசு

இருசு க்கட்டை தான் வண்டியின் மையப்பகுதியைத் தாங்கி நிற்கும் . வண்டியின் அச்சானது இந்த இருசின் வழியே தான் செல்லும் . அந்த அச்சின் முனையில் இருக்கும் சக்கரங்கள் இருசின் உதவியுடனே இணைக்கப்பட்டிருக்கும் . வண்டி சுழல்வதில் இருசின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது .

ஏர்க்கால் , மூக்கேர் , ஏர்க்கால்சட்டம்

ஏர்க்கால் சட்டம் என்பது மாட்டு வண்டியினுடைய மையப்பகுதியிலிருந்து மாட்டினைப் பூட்டப் பயன்படும் இடம் வரையுள்ள பகுதிக்கு பெயர் தான் ஏர்க்கால் சட்டம் . இந்த ஏர்க்கால் சட்டத்தில் உள்ள நுனிப்பகுதி மூக்கேர் எனவும் , வண்டியை ஓட்டுபவர் அமரும் பகுதிக்கு முன்பாக உள்ள பகுதி ஏர்க்கால் எனப் பல பெயர்களால் இடத்துக்கு தகுந்தவாறு அழைக்கப்படும் .

பூ ட்டாங் கயிறு , பூ ட்டாங் குச்சி

நுகத்தடியில் காணப்படும் துளையில் ஒன்றில் பூட்டாங் குச்சியும் மற்றொரு துளையில் பூ ட்டாங் கயிறும் தொங்க விடப்பட்டிருக்கும் . இந்த இரண்டின் மூலமே மாடுகள் பூட்டப்பட்டு வண்டி இழுக்கும் .

முளைக்குச்சி

அல்லை ப்படல் இந்த முளைக்குச்சியின் உதவியோடு கட்டப்பட்டிருக்கும் . வண்டியிலுள்ள பொருட்கள் கீழே விழாமல் இருப்பதற்கு இதுவும் பக்க பலமாக இருக்கும் .

கொலு ப்பலகை

வண்டி ஓட்டுபவர் அமர்ந்து வண்டியை இயக்க எதுவாக அமைக்கப்பட்டுள்ள பலகை தான் இந்தக் கொலு ப்பலகை . இது சில நேரங்களில் வண்டியை ஓட்டுபவர் நின்று கொண்டே பயணிக்க எதுவாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும் .

கருத்துகள் இல்லை: