7.24.2020

ஐங்குறுநூறு --- சில தகவல்கள்

ஐங்குறுநூறு -- எட்டுத்தொகை என் வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று .இதில் உள்ள பாடல்கள் சங்ககாலத்தை சேர்ந்தவை . இது மூன்றடி சிற்றெல்லையும் ஆறடி பேரெல்லையும் கொண்டது ஆகும் .ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் . குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் பாலை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை . ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன .

ஐங்குறுநூறில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன . இவற்றை தொகுக்க உதவும் பாடலும் பிரிவுகளும்
மருதத் திணைப் பாடல்கள் 100 -- ஓரம்போகியார்

நெய்தல் திணை பாடல்கள் -- 100 அம்மூவனார்

குறிஞ்சித் திணை பாடல்கள் -- 100 கபிலர்

பாலைத் திணை பாடல்கள் -- 100 --ஓதலாந்தையார்

முல்லைத் திணை பாடல்கள் -- 100 -- புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

தொகுப்பித்தவர் -- யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

நூலின் அமைப்பு :

நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாலோ அல்லது அப்பாடலைகளில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ தனித்தனி பெயர்கள் பெற்றன .
வேட்கைப்பத்து , வேழப்பத்து ,நெய்யோப்பத்து , கள்வன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும் பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து , தோழி வற்புறுத்தப்பத்து , செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும்பெயர் பெற்றன . தொண்டிப்பத்து அந்தாதி முறையில் அமைந்துள்ளது . அன்னாய் பத்து ,சொல்லாட்ட்சியும் ,பொருளாட்ச்சையும் பொருந்தியது .

விலங்கு பறவைகளை கருப்பொருளாகக் கொண்டு குரக்குப்பத்து , கேழற்பத்து , மயிற்பத்து , கிள்ளைப்பத்து ஆகிய பெயர்களும் அமைந்துள்ளன . உள்ளுறை , உவமை , இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்துள்ளன . குறைந்த அளவிலான அடிகளைக் கொண்டிருந்தாலும் இப்பாடல்களில் அகப்பொருளுக்குரிய முதல் , கரு ,உரி ஆகிய மூன்றும் குறைவின்றி அமைந்துள்ளன .

சுவைகளில் எழுதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நூலை பிற்காலத்தில் ழிந்துபோகும் நிலையை எய்தியபோது பல சுவடிகளை சோத்தித்து தற்கால தமிழருக்கு பயன்படும் வகையில் 1903 ஆம் ஆண்டு முதன் முதலாக பதிப்பித்து வெளியிடப்பட்டது .

வாலிழை பாகத்து ஒருவன் என்ற சிவபெருமான் பாடலை கடவுள் வாழ்த்திய பாட்டாக எழுதி சங்ககாலத்திலிருந்து சுமார் 300 ஆண்டுகளுக்கு பின்னர் சேர்க்கப்பட்டது இந்த பாடலை எழுதியவர் பெருந்தேவனார் ஆவார் . உண்மையில் கடவுள் வாழ்த்து பாடல் ஐங்குறுநூறு பாடல் காலத்தில் எழுதப்பட்டதல்ல .

அந்த பாடல் இதோ

நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தான் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே

இந்த பாடல் இறைவனின் விரிவாகத் தன்மையை ஒன்று , இரண்டு மூன்று என்று எண்ணிக்காட்டுகிறது .அவன் ஒருவன் நீலநிரப் பெண்ணைத் தன பாகத்தில் வைத்துக் கொண்டிருப்பவன் . அதனால் அவனுக்கு ஆண் - திருவடி , பெண் - திருவடி என்று இரண்டு திருவடிகள் . இரண்டும் இருவகைத் தாள் (முயற்சி) . இந்த இருவகை முயற்சியினால் மூன்று வகையான உலகங்களும் தோன்றின . அவை மேல், இடை , கீழ் - என்பன மூவகை உலகங்கள் .

பேச்சு தமிழ் -- சில விளக்கங்கள் !


பேச்சு தமிழில் நாம் அன்றாடம் அடுக்கு தொடர் போல பயன்படுத்தும் சில வார்த்தைகளை நாம் ஊடுருவிப் பார்த்ததில்லை அல்லது கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விடுகிறோம் . ஆனால் உண்மையில் அந்த சொற்களுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவர் . நமக்கே தெரியாதது போது நாம் எப்படி நம் குழந்தைகளுக்கு விளக்கப்போகிறோம் என்பது நம் முன் இருக்கும் பெரிய கேள்வி . கீழே சில தொடர்வார்த்தைகளையும் அதன் பொருளையும் கொடுத்துள்ளேன் . தமிழ் எவ்வளவு அழகான ஆழமான , பொருள் பொதிந்த மொழி என்பது இதிலிருந்து விளங்கும் .

அந்தி சந்தி

அந்தி -- மாலைக்கும் இரவுக்கும் இடையில் உள்ள பொழுது

சந்தி -- இரவுக்கும் காலைக்கும் இடையில் உள்ள விடியல் பொழுது

அக்குவேர் ஆணிவேர்

அக்குவேர் -- செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்

ஆணிவேர் -- செடியின் கீழ் ஆழமாக செல்லும் உறுதியான வேர்

குண்டக்க மண்டக்க

குண்டக்க -- இடுப்பு பகுதி

மண்டக்க -- தலைப் பகுதி

சிறுவர்கள் கால்பக்கம் , தலைப்பக்கம் பார்க்காமல் தூங்குவார்கள் .அதுபோல் வீட்டில் பொருள்கள் சிதறி மாறி இருத்தலே குண்டக்க மண்டக்க என்பதற்கு பொருள் .

அரை குறை

அரை -- ஒரு பொருளில் சரி பாதி அளவு

குறை -- அந்த சரி பாதியளவில் குறைவாக உள்ளது குறை .

உதாரணம் -- அரை குறை வேலை

அக்கம் பக்கம்

அக்கம் -- தன் வீடும் தான் இருக்கும் இடமும்

பக்கம் -- பக்கத்து வீடும் பக்கத்தில் உள்ள இடமும்

கார சாரம்

காரம் -- உறைப்புச்சுவை .

சாரம் சார்ந்தது

*காரம் சார்ந்த பிற சுவைகள் )

இசகு பிசகு

இசகு -- இயல்பு தெரிந்தும் ஏமாற்றுபவனிடம் ஏமாறுதல்

பிசகு -- தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்

இடக்கு முடக்கு

இடக்கு -- எள்ளி நகைத்தும் , இகழ்ந்தும் பேசுதல்

முடக்கு -- கடுமையாக எதிர்த்தும் தடுத்த்தும் பேசுதல்

ஆட்டம் பாட்டம்

ஆட்டம் -- தாளத்திற்கு பொருந்தியோ / பொருந்தாமலோ ஆடுவது

பாட்டம் -- ஆட்டத்திற்கு பொருந்தியோ / பொருந்தாமலோ பாடுவது

அலுப்பு சிலிப்பு

அலுப்பு -- உடலில் உண்டாகும் வலியும் குடைச்சலும்

சலிப்பு -- உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும் சோர்வும்

தோட்டம் துரவு / தோப்பு துரவு

தோட்டம் -- செடி , கொடி கீரை பயிரிடப்படும் இடம்

தோப்பு -- மரங்களின் தொகுப்பு

துரவு -- கிணறு

காடு கரை

காடு -- மேட்டு நிலம் (முல்லை )

கரை -- வயல் - நிலம் (மருதம் நன்செய் , புன்செய் }

காவும் கழனியும்

கா -- சோலை

கழனி -- வயல்

மருதம் சார்ந்த நிலப்பகுதி

நத்தம் புறம்போக்கு

நத்தம் -- ஊருக்குப் பொதுவாகிய மந்தை . ஊருக்குப் பக்கத்தில் இருக்கும்

புறம்போக்கு -- ஆடு மாடு மேய்வதற்காக அரசு ஒதுக்கிய புல்நிலம் -- ஊர் கடந்து தூரத்தில் இருக்கும்

பழக்க வழக்கம்

பழக்கம் -- ஒருவர் ஒரு செயலை பலகாலம் செய்து வருவது

வழக்கம் -- பலர் ஒரு செயலைப் பல காலம் கடைப்பிடித்தது வருவது (மரபு )

சத்திரம் சாவடி

சத்திரம் -- இலவசமாக சோறு போடும் இடம் --விடுதி

சாவடி -- இலவசமாக தங்கும் இடம் - விடுதி

நொண்டி நொடம்

நொண்டி -- காலில் அடிபட்டோ அல்லது அடிபடாமலோ , ஏதோ ஒரு குறையால் நடக்க முடியாமல் குறைபாட்டுடன் நடப்பவர் அல்லது நடக்க முடியால் இருப்பவர் .

நொடம் -- கை முடங்கி அதனால் கையின் செயல் அற்றவர் (நுடம் , முடம் )

பற்று பாசம்

பற்று -- நெருக்கமாக உறவாடி இருத்தல்

பாசம் -- பிரிவில்லாமல் சேந்தே இருத்தல் .

ஏட்டிக்குப் போட்டி

ஏட்டி -- விரும்பும் பொருள் அல்லது செயல் . ஏடல் -- விருப்பம்

போட்டி -- விரும்பும் பொருள் அல்லது செயலுக்கு எதிராக வரும் ஒன்று .

கிண்டலும் கேலியும்

கிண்டல் -- ஒருவன் மறைத்தச் செய்தியை அவன் வாயில் இருந்தே பிடுங்குதல் (கிண்டி தெரிந்து கொள்ளுதல் )

கேலி -- எள்ளி நகையாடுதல்

ஒட்டு உறவு

ஒட்டு -- இரத்த சம்பந்தம் உடையவர்கள் (தாய் தந்தை , உடன் பிறந்தவர்கள் , மக்கள் }

உறவு -- பெண் கொடுத்த அல்லது பெண் எடுத்த வகையில் நெருக்கமானவர்கள் .

பட்டி தொட்டி

பட்டி -- மிகுதியாக ஆடுகள் வளர்க்கப்படும் இடம் (ஊர் )

தொட்டி -- மாடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் இடம் -- ஊர்

கடை கண்ணி

கடை -- தனித்தனியாக அமைந்த வணிக நிலையம்

கண்ணி -- தொடர்ச்சியாக கடைகள் அமைந்த கடைவீதி

பேரும் புகழும்

பேரும் --- வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பும் பெருமையும்

புகழ் -- வாழ்விற்கு பிறகும் நிலைப் பெற்றிருக்கும் பெருமை

நேரம் காலம்

நேரம் -- ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைந்த பொழுது .

காலம் -- ஒரு செயலைச் செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் எடுத்துக்கொள்ளும் கால அளவு நிலை

பழி பாவம்

பழி -- நமக்கு தேவையில்லாத பொருந்தாத செயலைச் செய்ததால் இப்பிறப்பில் உண்டாகும் பழிப்பு

பாவம் -- தீய செயல்களைச் செய்ததால் மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் தீய நிகழ்வுகள் .

கூச்சலும் குழப்பமும்

கூச்சல் -- துன்பத்தில் சிக்கி உள்ளோர் போடும் அவல ஒலி (ஓலம்) , கூ --கூவுதல்

குழப்பம் -- அவள் ஒலியைக் கேட்டு அங்கு வந்தவர்கள் போடும் இரைச்சல் ..

நகை நட்டு
நகை -- பெரிய அணிகலன்களைக் குறிக்கும் (அட்டியல் , ஒட்டியாணம் , சங்கிலி )

நட்டு -- சிறிய அணிகலன்களைக் குறிக்கும் . திருகு உள்ள தோடு , காப்பு , கொப்பு )

பிள்ளை குட்டி

பிள்ளை --- பொதுப் பெயர் . இருப்பினும் ஆண் குழந்தையைக் குறிக்கும்

குட்டி -- இது பெண் குழந்தையைக் குறிக்கும்

பங்கு பாகம்

பங்கு -- கையிருப்பு . பணம் , நகை , பாத்திரங்களைபிரித்தல் (அசையும் சொத்து )

பாகம் -- வீடு ,மனை நிலா புலன்களைப் பிரித்தல் (அசையா சொத்து )

வாட்ட சாட்டம்

வாட்டம் -- வளமான தோற்றம் , வாளிப்பான உடல் , அதற்கேற்ற உயரம் .

சாட்டம் -- உடல் வளமுள்ள கணம் . தோற்றப் பொலிவு

காய் கறி

காய் -- காய்களின் வகைகள்

கறி -- சைவ உணவில் கறிக்கு பயன்படும் கிழங்கு வகைகளும் கீரை வகைகளும்

கால்வாய் வாய்க்கால்

கால்வாய் -- குளத்திற்கு தண்ணீர் வரும் கால் (பாதை)

வாய்க்கால் -- குளத்திலிருந்து தண்ணீர் செல்லும் கால் (பாதை ) . பாதை என்பது நீர் வழிப் பாதையைக் குறிக்கும் .

ஈவு இரக்கம்

ஈவு -- ஈதல் , கொடை வழங்குதல்

இரக்கம் -- அருள் . பிற உயிர்களின் மேல் பரிவு கொள்ளுதல்

பொய்யும் புரட்டும்

பொய் -- உண்மை இல்லாததை சொல்லுதல்

புரட்டு - ஒன்றை நேருக்கு மாறாக மாற்றி , உண்மையைப் போல் நம்பும் படியாக கூறுவது

சூடு சொரணை

சூடு -- ஒருவர் தாக்காத சொல்லை ப் பேசும்போது / தாக்காத செயலைச் செய்யும் போது நமக்கு ஏற்படும் மனக்கொதிப்பு ( மனவெதுப்பு , எரிச்சல் )

சொரணை -- நமக்கு ஏற்படும் மான உணர்வு

பட்டம் விருது

பட்டம் -- கல்லூரி , பல்கலைக்கழகம் இவற்றில் படித்து பெறுவது . பெயருக்குப் பின்னால் இடம் பெறும் .
விருது -- தகுதி அடிப்படையில் வழங்கப்படுவது . இது பெயருக்கு முன்னால் இடம் பெறும் .

நன்றி !

வடமொழிமயமான தமிழ்நாட்டு ஆறுகளின் பெயர்கள் !


பண்டைத் தமிழகம் இன்றைய ஆந்திரத்தின் கிருட்டினா நதி வரைக்கும் பரவி இருந்தது . அந்த காலத்தில் தமிழறிந்த பகுதிக்குள் பாய்ந்த ஆறுகள் அனைத்திற்கும் தமிழ் பெயர்களே இருந்தன . பிற்காலத்தில் வடமொழியின் ஆதிக்கத்தால் அந்த பெயர்கள் படமொழிப் படுத்தப்பட்டு பின்னர் அதுவே நிலைத்துவிட்டது .

கிருஷ்ணா ஆற்று நீர் கரிசல் நிலத்தில் பாய்ந்து வருவதால் கரிய நிறத்தோடு இருக்கும் . அதை உணர்த்தும் விதமாக கண்ணனின் நிறத்தோடு தொடர்புபடுத்தி கிருஷ்ணா நதி என்ற வடமொழி பெயர் நிலைத்தது . உண்மையான தமிழ் பெயர் " கரும்பெண்ணை " என்பதே . பெண்ணை என்றால் நல்ல நீர் பெருக்குடைய ஆறு என்று பொருள் .

காவிரி ஆற்றைக் " காவேரி " என்று வழங்குவதும் உண்டு . இகரம் , ஏகரம் ஆகும் இசைத்தமையால் வி என்பது வே என்று ஆகிவிட்டது . கா என்றால் சோலை , விரி -- விரித்தல் . செல்லுமிடமெல்லாம் சோலைகளை விரித்து செல்லுபவள் என்று பொருள் . இன்னொரு பெயர் " பொன்னி " .

தாமிரபரணி என்னும் ஆற்று பெயரும் வடமொழி தான் . அதன் தமிழ் பெயர் " தண்பொருநை ஆறு என்பதுவே . பாரதியார் தன்னுடைய பாடலில் காவிரி , தென்பெண்ணை , பாலாறு தமிழ் கண்டதொரு பொருநை என்று குறிப்பிட்டிருக்கிறார் .. தண் - தண்மை என்றால் குளிர்ச்சி என்று பொருள் . மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி பாய்வதால் தண்பொருநை ஆறு எப்போது குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் இந்த பெயர் வந்தது .

வைகை ஆற்றின் தூய பெயர் ' வையை என்பதே . வையைசூழ்ந்த வளங்கெழு வைப்பின் என்கிறது புறநானுறு . நாளடைவில் இது வைகை என்று மருவி வழங்குகிறது .

கொசஸ்தலை ஆறு -- திருவள்ளூர் மாவட்டத்தில் ஓடுவது . இதுவம் வாதமிழி பெயரே . உண்மையான சரியான பெயர் " கொற்றலை " என்பதே . சிறு சிறு அலைகள் மொழி விளையாடும் ஆறு என்ற பொருளில் அமைந்தது .

பவானி என்பதும் வடமொழி பெயரே . வானி ஆறு என்பதே சரியான தமிழ்ப் பெயர் . அது எப்படியோ காலப்போக்கில் பவானி என்று திரிந்து விட்டது . " சாந்து வரு வானி நேரினும் ' என்கிறது பதிற்றுப்பத்து (86 ) .இன்றைக்கும் பவனி ஆற்றங்கரையில் கீழ் பவானி , மேல் பவானி , பூவானி ஆகிய பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன .

இது பெரிய வானி ஆறு . இன்னொன்று சிறிய வானி ஆறு . இதைத்தான் "சிறுவாணி " என்று பிழையாக இன்று எழுதுகிறார்கள் .

அமராவதி ஆற்றின் உண்மையான தமிழ் பெயர் "ஆன்பொருநை " ஆவினங்கள் மேய்ந்து திகழுமாறு பாயும் ஆறு என்ற பொருளில் அமைந்தது ஆன்பொருநை .

பேரியாறு என்ற ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பாய்கிறது . அதுதான் மருவிப் போய் " பெரியாரு " என்கிறார்கள் . பேரி என்றால் முரசு . வெற்றி முரசு போல ஆர்பரித்தபடி பாயும் ஆறு என்ற பொருளில் பெரியாரு எனப்பட்டது .

அடையாறில் வெள்ளப்பெருக்கின் போது தேனடைகள் மிதந்து சென்றிருக்கின்றன , அதனால் அப்பெயர் வந்தது . அடையாறு என்பதை இன்று " அடையார் " என்று பிழையாக எழுதுகிறார்கள் .

கூவம் என்றால் கிணறு . வழியோரங்களில் கிணற்று நீர் வளத்தினைப் பெருக்கியபடி பாய்ந்ததால் கூவம் ஆறு என்ற பெயர் ஏற்பட்டது . அனால் இன்று கூவம் என்றால் கழிவு நீர் என்பது போல் பொருள் கொள்ளப்படுவது வருந்த தக்கது .

நன்றி ! கவிஞர் திரு மகுடேசுவரன் அவர்கள் .

வள்ளுவன் சொன்ன கவரிமா , கவரிமான் ஆனது எப்படி ?


வள்ளுவன் சொன்ன கவரிமா , கவரிமான் ஆனது எப்படி ?

கவரிமான் என்பது மான் இனமே அல்ல . அதன் உண்மையான பெயர் கவரிமா என்பதே . கவரிமா என்பது தமிழ்நாடு விலங்கே அல்ல .இமயமலையில் வாழும் மாடு வகையை சார்ந்தது , அதுவும் எருமை மாடு வகையை சார்ந்தது . இதையே நமது மக்கள் காலப்போக்கில் கவரி மான் என்று குழப்பிக் கொள்கிறார்கள் .

கவரி மான் எங்கு வசிக்கிறது ? முடி விழுந்தாள் தற்கொலை செய்துகொள்ளுமா ? எப்படி தற்கொலை செய்து கொள்ளும் ? என்ற கேள்விகளுக்கு யாரிடமாவது பதில் இருக்கிறதா ?

" மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் " குறள் 969 .


கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்துகொள்ளும் அதே போல மானம் மிக்கவர்கள் , தம் பெருமைக்கு இழுக்கு வரும் பொது உயிர் வாழமாட்டார்கள் என்பது பொதுவாக இந்தக் குரலுக்கு கூறப்படும் விளக்கம் . ஆனால் அப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறியியலில் தங்கள் இல்லையே ? இந்த குறளைக் கவனமாக படியுங்கள் மீண்டும் ஒருமுறை . கவரி மா என்றே குறிப்பிடுகிறார் , கவரிமான் என்றல்ல . " கவரிமா என்ற விலங்கைத் தான் நம் மக்கள் காலப்போக்கில் பேச்சுவாக்கில் " கவரிமான் " என்று மாற்றிவிட்டனர் பொருள் புரியாமல் .

புறநானுற்றில் இருந்து ஒரு பாடல் , அதில் இது பற்றிய எ குறிப்பு இருக்கிறது .

" நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வடதிசை யதுவே வான்
தோய் இமயம் "

இமயமலையில் கவரிமா என்ற விலங்கு நரந்தை என்றும் புல்லை உண்டு தன்துணையுடன் மகிழ்ச்சியாக வாழும் என்பது இதன் பொருள் . அதாவது இது தமிழ் நட்டு விலங்கல்ல .இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் வியப்பு . கவரி மா என்பது மான் வகையல்ல , எருமை மாட்டு வகையைச்சார்ந்தது என்பது இரண்டாவது வியப்பு .வள்ளுவர் சொன்னது இதைத்தான் .

இந்த கவரிமா பற்றி பதிற்றுப்பத்து என்ற நூலிலும் குறிப்புகள் உள்ளன . முடி சடை போல தொங்கக்கூடிய விலங்குதான் கவரிமா . இதன் முடியை எடுத்து செயற்கை முடியை உருவாக்குவது வழக்கம் . கவரி என்ற சொல்லில் இருந்தான் சவரி / சவுரி என்ற இன்றைய சொல் உருவானது . மா என்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான சொல் .

இந்த குறளுக்கு என்ன பொருள் ?

பனிப்பகுதியில் வாழும் அவரிமாவுக்கு அதன் முடி கடுகுக்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது . அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ , மனிதர்களால் வெட்டப்பட்டாலோ குளிர் தாங்க முடியாமல் இறந்துவிடும் என்பதே அதன் உண்மையான பொருள் ஆகும் .

குறளின் பொருள் பிற்காலத்தில் திரிக்கப் பட்டுவிடாது என்பது வருத்தமான செய்தி . இனியாவது இந்த குறளை சரியான பொருளறிந்து பயன்படுத்துவோமாக .

நன்றி !