6.28.2020

எழுத்தாளர் சா கந்தசாமி

சா .கந்தசாமி அவர்கள்

1940 ஆம் ஆண்டு பழைய தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் பிறந்தார் . அங்கேயே பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரி கல்வியை முடித்தார் .. சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் , நாவலாசிரியர் ஆவார் .

இவர் 1968 இல் எழுதிய " சாயாவனம் " புதினம் பிரசுரமானத்திலிருந்து எழுத்துலகில் பிரபலமானார் . இப் புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது . நேரு , பெரியார் , .உ. வே. சா , மற்றும் வே . சாமிநாத சர்மா போன்றோரின் படைப்புகளை தன்னுடைய இளகிய வாழ்க்கைக்கான தளமாக அமைத்தார் .

" இதன் மூலம் எனக்கு கிடைத்த கல்வி உதவித் தொகை எனக்கு வலிமை , நம்பிக்கை மற்றும் தன்மை ஆகியவற்றை கொடுத்துள்ளது . இது எனது படைப்புகளை நுட்பமாக பாதித்திருக்கிறது " என்று அவர் கூறுகிறார் . எழுத்துக் கலை , கலை அலங்காரமாக இருக்காது என நம்புகிறேன் . சிறந்த இலக்கியம் , நேரம் , கலாச்சாரம் , மொழி மற்றும் அரசியல் சித்தாந்தத்தின் தடைகள் ஆகியவற்றை கடந்து செல்லும் ஒன்றாகும் . இது ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது பாலினத்துடன் தொடர்புடையது அல்ல . மிக முக்கியமாக உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு வாசகர் ஒரு நாவலை அல்லது சிறுகதையை புரிந்துகொள்ள முடியும் .

தமிழக அரசின் லலித்கலா அகாடமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பனியைப் பாராட்டும் வகையில் 1995 இல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி வழங்கி ஊக்குவித்ததது . இவரது தென்னிந்திய சுட்ட மண் (Terracotta ) பற்றிய ஆய்வின் அடிப்படையாக கொண்டு சென்னை தூர்தர்ஷன் " kaval தெய்வங்கள் " என்னும் 20 நிமிட ஆய்வுப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது .தென்னிந்திய டெராகாட்ட பற்றிய தனது ஆராய்ச்சி அடிப்படியில் Chennai பொதிகை 1989 ஆம் ஆண்டு சைப்ரஸில் " நிக்கோஸியா வில் அரங்கேறின திரைப்படவிழாக்காவில் முதன்முதலாக 20 நிமிட ஆவணப் படமான காவல் தெய்வங்கள் வெளியிட்டது .மார்ச் 1995 இல் லலித் கலா அகாடமி இவருக்கு ஒரு அங்கீகாரம் வழங்கியது .

1998 இல் இவரது " விசாரணைக்கு கமிஷன் " என்ற நாவலுக்கு தமிழுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கி பெருமைப்படுத்தியது .இவர் எழுதிய " நிகழ் காலத்திற்கு முன்பு " எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துரையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது .

இவருடைய சிறுகதையான " தக்கையின் மீது நான்கு கண்கள் " இயக்குனர் Vasanth அவர்கள் குறும்படமாக எடுத்துள்ளார் .

இவரது சிறுகதைகளான

1 . தக்கையின் மீது நான்கு கண்கள்

2 .ஹிரண்யவதம்

3 . சாந்தகுமாரி

இந்த மூன்று கதைகளும் ஜெயமோகனின் இந்த நூற்றாண்டின் சிறந்த நூறு சிறுகதைகளில் குறிப்பிட்டுள்ளார் .

இந்த கடைகள் எஸ் ரா வின் சிறந்த நூறு கதைகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளன என்பது கூடுதல் சிறப்பு .

இவரது சாயாவனம் நாவல் தமிழில் இந்த நூற்றாண்டில் வெளிவந்த சிறந்து நாவல்களில் குறிப்பிடத்தக்க ஒன்று என்றால் அதில் மிகையில்லை .

கண்ணீர்… !

விசை மாற்றத்தினால்
திசை மாற்றம் பெறும்
பசையில்லா திரவம்

துளித்துளியாய் சுரந்து
படிப்படியாய் திரண்டு
வெளியேறும் திரவச்சொல்

இதயம் புகுந்து
கொல்லாமல் கொல்லும்
அருவ வில்

உப்புச் சுவை
உதிரும் மழை
அதிரும் மனம்
கரையும் கல்
உரையில்லாச் சொல்

வல்லினத்தை வீழ்த்தும்
மெல்லினத்தின் ஆயுதம்
இயற்கை தந்தது
என்றும் வலிமையானது

போர் முனையில்
வென்ற வனெல்லாம்
பாவையின் பார்வையின்
நீர் முனையில்
தோற்பான் காண் !