6.28.2020

எழுத்தாளர் சா கந்தசாமி

சா .கந்தசாமி அவர்கள்

1940 ஆம் ஆண்டு பழைய தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் பிறந்தார் . அங்கேயே பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரி கல்வியை முடித்தார் .. சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் , நாவலாசிரியர் ஆவார் .

இவர் 1968 இல் எழுதிய " சாயாவனம் " புதினம் பிரசுரமானத்திலிருந்து எழுத்துலகில் பிரபலமானார் . இப் புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது . நேரு , பெரியார் , .உ. வே. சா , மற்றும் வே . சாமிநாத சர்மா போன்றோரின் படைப்புகளை தன்னுடைய இளகிய வாழ்க்கைக்கான தளமாக அமைத்தார் .

" இதன் மூலம் எனக்கு கிடைத்த கல்வி உதவித் தொகை எனக்கு வலிமை , நம்பிக்கை மற்றும் தன்மை ஆகியவற்றை கொடுத்துள்ளது . இது எனது படைப்புகளை நுட்பமாக பாதித்திருக்கிறது " என்று அவர் கூறுகிறார் . எழுத்துக் கலை , கலை அலங்காரமாக இருக்காது என நம்புகிறேன் . சிறந்த இலக்கியம் , நேரம் , கலாச்சாரம் , மொழி மற்றும் அரசியல் சித்தாந்தத்தின் தடைகள் ஆகியவற்றை கடந்து செல்லும் ஒன்றாகும் . இது ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது பாலினத்துடன் தொடர்புடையது அல்ல . மிக முக்கியமாக உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு வாசகர் ஒரு நாவலை அல்லது சிறுகதையை புரிந்துகொள்ள முடியும் .

தமிழக அரசின் லலித்கலா அகாடமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பனியைப் பாராட்டும் வகையில் 1995 இல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி வழங்கி ஊக்குவித்ததது . இவரது தென்னிந்திய சுட்ட மண் (Terracotta ) பற்றிய ஆய்வின் அடிப்படையாக கொண்டு சென்னை தூர்தர்ஷன் " kaval தெய்வங்கள் " என்னும் 20 நிமிட ஆய்வுப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது .தென்னிந்திய டெராகாட்ட பற்றிய தனது ஆராய்ச்சி அடிப்படியில் Chennai பொதிகை 1989 ஆம் ஆண்டு சைப்ரஸில் " நிக்கோஸியா வில் அரங்கேறின திரைப்படவிழாக்காவில் முதன்முதலாக 20 நிமிட ஆவணப் படமான காவல் தெய்வங்கள் வெளியிட்டது .மார்ச் 1995 இல் லலித் கலா அகாடமி இவருக்கு ஒரு அங்கீகாரம் வழங்கியது .

1998 இல் இவரது " விசாரணைக்கு கமிஷன் " என்ற நாவலுக்கு தமிழுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கி பெருமைப்படுத்தியது .இவர் எழுதிய " நிகழ் காலத்திற்கு முன்பு " எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துரையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது .

இவருடைய சிறுகதையான " தக்கையின் மீது நான்கு கண்கள் " இயக்குனர் Vasanth அவர்கள் குறும்படமாக எடுத்துள்ளார் .

இவரது சிறுகதைகளான

1 . தக்கையின் மீது நான்கு கண்கள்

2 .ஹிரண்யவதம்

3 . சாந்தகுமாரி

இந்த மூன்று கதைகளும் ஜெயமோகனின் இந்த நூற்றாண்டின் சிறந்த நூறு சிறுகதைகளில் குறிப்பிட்டுள்ளார் .

இந்த கடைகள் எஸ் ரா வின் சிறந்த நூறு கதைகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளன என்பது கூடுதல் சிறப்பு .

இவரது சாயாவனம் நாவல் தமிழில் இந்த நூற்றாண்டில் வெளிவந்த சிறந்து நாவல்களில் குறிப்பிடத்தக்க ஒன்று என்றால் அதில் மிகையில்லை .

கருத்துகள் இல்லை: