6.28.2020

கண்ணீர்… !

விசை மாற்றத்தினால்
திசை மாற்றம் பெறும்
பசையில்லா திரவம்

துளித்துளியாய் சுரந்து
படிப்படியாய் திரண்டு
வெளியேறும் திரவச்சொல்

இதயம் புகுந்து
கொல்லாமல் கொல்லும்
அருவ வில்

உப்புச் சுவை
உதிரும் மழை
அதிரும் மனம்
கரையும் கல்
உரையில்லாச் சொல்

வல்லினத்தை வீழ்த்தும்
மெல்லினத்தின் ஆயுதம்
இயற்கை தந்தது
என்றும் வலிமையானது

போர் முனையில்
வென்ற வனெல்லாம்
பாவையின் பார்வையின்
நீர் முனையில்
தோற்பான் காண் !

கருத்துகள் இல்லை: