மௌனம் -- 19 வித சூழ்நிலைகள் மற்றும் அதன் பொருள்...
மௌனம் என்ற சொல் நான் அறிந்த வரையில் 19 வகையான பொருளை தருகிறது .
* பெண் பார்க்கும் சமயத்தில் கேள்வி கேட்கப்படும் நேரத்தில் பெண்ணின் மௌனம் --- சம்மதம் /ஒப்புதல்
* நாம் விரும்பிய சில உறவுகளை பிரியும் போது மௌனம் -- துன்பம்
* இடையுறாது காரியம் செய்யும் விடா முயற்சியின் போது மௌனம் --நம்பிக்கை
* நம் இதயத்தில் அமர்ந்த அந்த காதலில் மௌனம் -- சித்ரவதை
* நாம் தோல்வி கண்டு வெற்றிக்கு வழிதேடும்போது மௌனம் -- பொறுமை
* நாம் வெற்றி கண்டபோது நம்மைச் சூழ்ந்திருக்கும் மௌனம் -- அடக்கம்
*திருமணக்கோலத்தில் உள்ள அமைதியின் போது மௌனம் -- வெட்கம்
* தவறுதலாக தவறு செய்தபோது மௌனம் -- பயம்
* ஆசைகள் நம்மை சூழ்ந்திருக்கும் போது மௌனம் --எதிர்பார்ப்பு
*கோபத்தை குறைக்காமல் அடக்கும் போது மௌனம் --ஆற்றாமை
* இலக்கை அடைய ஒருமுகப்படுத்தும் முயற்சி மௌனம் -- வலிமை /சக்தி
* தீவிரமாகப் போராடும்போது மௌனம் -- ஒருமுகத்தன்மை
* பிடிக்காத செயல்களை இயலாமையின் காரணமாக ஒத்துக்கொள்ளும் மௌனம் --எதிர்ப்பு
* எதிர்பாராத தோல்வி மற்றும் கேலிப்பேச்சு மௌனம் -- அவமானம்
* நம்மைவிட்டு பிரிந்தவர்களை பாசத்தோடு நினைக்கும்போது மௌனம் --சொற்களற்ற துயரம்
* நம்மை கெடுத்தவர்களை பழிவாங்க நினைக்கும் போது மௌனம் -- ஆத்திரம் , சினம்
* கற்ற வித்தைகளை கையாளும் போது மௌனம் -- மகிழ்ச்சி
* அயர்ந்த வேளையில் அமைதியான அந்த மௌனம் -- எதிர்பார்ப்பில்லாத உறக்கம்
* உறக்கம் என்று அனைவரும் நினைத்திருக்க உடலோ அசையாமல் அயர்ந்திருக்க அண்டை அயலாரை சூழ்ந்திருக்கும் மௌனம் -- சாவு / இறப்பு .
நன்றி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக