12.30.2012

சிரிப்பு...!


உதடுகளின் விரிப்பு !
உள்ளக் கதவுகள்
மெல்லத் திறப்பு !
உண்மையான நகையின்
மென்மையானப் பிறப்பு !

நரம்புகளின் லேசான தளர்வு !
மனதை லேசாக்கும் -ஒரு
நேச உணர்வு !

மனித இனத்துக்கு மட்டுமே
இறைவன் தந்தது !
மருந்துக்கு கூட -பலர்
பயன்படுத்த மறுப்பது !

காசில்லாமல் வருவது !
கல்மனதையும் தகர்ப்பது !

உதடுகளை பிரித்து பிரித்து
உள்ளத்தில் இருந்து
சிரித்து சிரித்து
மனபாரத்தை இறக்கிவைப்போம் !
மரணத்தை துரத்தி வைப்போம் !

கருத்துகள் இல்லை: