4.04.2021

 சென்னை பற்றிய சில தெரியாத தகவல்கள் !


சென்னை - உலகின் இரண்டாவது நகராட்சி .1688 இல் நகராட்சியானது , அப்போது லண்டன் மட்டுமே நகராட்சியாக இருந்தது .


சென்னை -- இந்தியாவின் ஒரே நகரம் -- அதில் மூன்று கப்பல் போக்குவரத்து தளம் உள்ளது . சென்னை , எண்ணூர் , காட்டுப்பள்ளி .


சென்னை -- ராயல் என்பீல்ட் தயாரிக்கும் ஒரே இடம் .


சென்னை -- உலகின் இரண்டாவது கடற்கரை உள்ளது.


சென்னை -- மட்டுமே தேசிய பூங்கா மாநகர எல்லைக்குள் உள்ளது .


சென்னை -- மூன்று ஆறுகள் உள்ள ஒரே மாநகரம் . அடையாறு , கூவம் ,கொற்றலை ஆறு .


சென்னை -- மென்பொருள் தொடர்பகுதி பழைய மஹாபலிபுரம் சாலை -- இந்தியாவின் நீண்ட மென்பொருள் காரிடார் .


சென்னை --ஆட்டோமொபைல் நகரம் - ஆசியாவிலேயே அதிக ஆட்டோமொபைல் தயாரிக்கும் இடம் .


சென்னை --கோயம்பேடு பேருந்து நிலையம் ,ஆசியாவின் மிகப்பெரியது 


சென்னை --சிக்கன் 65 பிறந்த இடம் புகாரி ஹோட்டல் .


சென்னை --ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் -- அறிஞர்அண்ணா நூலகம் 


சென்னை --வண்டலூர் ஜூ ,இந்தியாவின் பெரிய விலங்குகள் சாலை 


சென்னை -- கிண்டி பொறியியல் கல்லூரி , இந்தியாவின் முதலானது மற்றும் மிகப்பழமையானது .


சென்னை -- இந்தியாவின் முதல் பத்து பொறியியல் கல்லுரிகளில் இரண்டு ஒரே சாலையில் சில மைல்கள் தொலைவில் சென்னையில் அமைந்துள்ளன . சென்னை CEG (கிண்டி ) மற்றும் GEC சர்தார் படேல் சாலை .


சென்னை --இந்தியாவின் பழமையான ஷாப்பிங் மால் ,ஸ்பென்சர் பிளாசா  1863 .


சென்னை - உலகின் பழமையான மனித கூடு அதிரம்பாக்கம் சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .


சென்னை -- உயர்நீதிமன்றம் சென்னை ,உலகின் இரண்டாவது நீண்ட நீதிமன்ற வளாகம் .


சென்னை --உலகப் போரால் பாதிக்கப்பட்ட ஒரே இந்திய நகரம் .


சென்னை --பாலங்கள் நகரம் , அதிக அளவிலான பாலங்கள் உள்ள நகரம் 


சென்னை --கத்திப்பாரா பாலம் --ஆசியாவின் மிக நீண்ட clover flyover .


சென்னை -மிக அதிக வெளிநாட்டு பயணிகள் வரும் நகரம் 


சென்னை -- இந்தியாவின் மருத்துவமனைகள் மற்றும் தலைசிறந்த மருத்துவப்பணிகளின் நகரம் 


சென்னை -- அதிக grandmastergalai உருவாக்கிய நகரம் 


சென்னை --ராயபுரம் புகைவண்டி  நிலையம் , இந்தியாவில் இன்னும் பணிசெய்யும் புகைவண்டி நிலையம் .


சென்னை -- ICF , உலகின் பெரிய ரயில் கோச்சி தொழிற்சாலை 


சென்னை -- மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் , மிகப்பழைய மெடிக்கல் காலேஜ் மற்றும் மிகப்பழைய  மருத்துவமனை   1664 mudal செயல்  படுகிறது .


சென்னை --ஒரகடம் ,   தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் hub ,Forutne ௫௦௦ கம்பெனிகளில் 22 இங்கே உள்ளது .


சென்னை --அதிக திரையரங்குகள் உள்ள மாநகரம் .நான்கு முதல்வர்கள் உருவான இடம் .


சென்னை --ஆசியாவின்  முதல் விமான சேவை நடந்த இடம் வருடம் 1910 


சென்னை --இந்தியாவின் பழமையான ரேஸ் track ,  குதிரை மற்றும் மோட்டார் ரேஸ் நடைபெற்ற இடம் .


சென்னை --மெட்ராஸ் ஸ்கூல் of ஆர்ட்ஸ் , இந்தியாவின் மிகப்பழமையான பைன் ஆர்ட்ஸ் ஸ்கூல் 1850 .


சென்னை -- ஹிக்கின்போதம்ஸ் ,மவுண்ட் ரோடு , மிகப்பழமையான புத்தக நிலையம் 1780 .


சென்னை -- EID பாரி , மிகப்பழமையான கம்பெனி  1780  


சென்னை -- MRF  இந்தியாவின் மிகப்பெரிய டயர் தயாரிக்கும் தொழிற்சாலை .


சென்னை --மதராஸ் ரெஜிமென்ட் .இந்திய இராணுவத்தின் மிகப்பழமையான இபான்ட்ரி ரெஜிமென்ட் 


சென்னை --ஏவிஎம் ஸ்டுடியோ -- இந்தியாவின் மிகப்பழமையான இன்றும் படம் எடுக்கும் ஒரே ஸ்டுடியோ .


சென்னை -- St  ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் higher செகண்டரி ஸ்கூல் -- இந்தியாவின் மிகப்பழமையான ஸ்கூல் 1715 .


சென்னை --உலகின் ஒரே நகரம் - மிதிவண்டி , இருசக்கர வண்டிகள் , மூன்று சக்கர வண்டிகள், மகிழ்வுந்து ,சிற்றுந்து , , armed  சரியெர்ஸ் , லோகமோடிவ் , ரயில்வே கோச்செஸ், battle tanks -- எல்லாமே தயாரிக்கப்படுகிறது .

3.20.2021

 மரங்கள் -- சில அறிய தகவல்கள் !


மரங்களை பற்றிய சில அறிய தகல்வல் இதோ உங்களுக்காக ...


போதி மரம் என்பது அரச மரம் 


அரசமரக் காற்று வயிறு தொடர்பான நோய்களை போக்கும் .


இந்தியாவின் தேசிய மரம் ஆல மரம் 


அர்ஜுனனுக்கு க்ரிஷணன் உபதேசித்தது ஓர் ஆலமரத்தடியில் 


புங்கை மரநிழல் உடலுக்கு மிகவும் நல்லது 


வேப்ப மரக்காற்று உடலுக்கு நன்மை தருவது  


வாகை மரத்தழை வாயு தொல்லையைப் போக்கும் 


அதிக மணம் வீசும் மரம் -- சந்தனம் 


பல் குச்சிக்கு ஆல விழுது சிறந்தது 


மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழலை தரக் கூடியது .


மனிதன் ஒரு நாளைக்கு  மூன்று ஆக்ஸிஜன் உருளைகள் அளவு ஆக்ஸிஜன் சுவாசிக்கிறான்.


ஒரு ஆக்ஸிஜன் உருளையின் விலை 700 ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு 2100  ரூபாய் , ஒரு வருடத்திற்கு 766000  ரூபாயும் 65 ஆண்டு காலம் உயிர் வாழ ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படுகிறது .


இவ்வளவு விலையுயர்ந்த சுவாசிக்க காற்றை இலவசமாக நமக்கு தரும் மரங்களை நாம் பாதுகாத்து வணங்க வேண்டாமா ? மரங்கள் இயற்கை மனிதனுக்கு தந்த வரம் / கொடை . இனியேனும் மரத்தை அழிக்காமல் பாதுகாப்போம்  என்று உறுதி எதுத்துக்கொள்வோம் . நம் பிள்ளைகளுக்கும் மரத்தின் அருமை பெருமைகளை எடுத்தகூறுவோம் .


நன்றி !

 

நீர்நிலைகளின் பெயர்களும் அவற்றின் பயன்களும் --


தமிழ் கூறும் நல்லுலகில் நீர்நிலைகளுக்கு அவற்றின் பயப்பாட்டிற்கு ஏற்றாற்போல் பெயர்கள் வழக்கப்பட்டிருந்தன என்ற விபரங்கள் நம்மில் எத்துனைப் பேருக்குத் தெரியும் ? விபரங்களுக்கு கீழே தொடர்ந்து படியுங்கள் .

ஏரி --irrigation tank ; வேளாண்மை செய்ய ஏற்படுத்தப்பட்ட நீர்த்த தேக்கம் .

குளம் --Bathing tank --ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்க பயன்படும் நீர்நிலை

நடை கேணி --Large with steps on one side -- இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு

சேங்கை --Tank with duck weed --பாசிக்கொடி மண்டிய குளம் .

கால் --channel --நீரோடும் வழி

பிள்ளைக்கிணறு ---well in middle of a Tank --குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு

பொங்கு கிணறு --well with bubbling spiring --ஊற்றுக்கால்கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு .

சுனை --mountain pool --மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை .

மதகு --sluice with many venturese --பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை .அடைப்பும் திருப்பும் உள்ளது .

குட்டை --small pond --சிறிய குட்டம். மாடு முதலியன குளிப்பாட்டும் நீர் நிலை .

பொய்கை -- lake --தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்க்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை

குண்டு -- pool --குளிப்பதற்கேற்ற ஒரு சிறிய குளம் .

கலிங்கு ---sluice with many venturse --ஏரி முதலில் பாசன நீர்த்த தேக்கம் உடைப்பெடுக்காமல் இருபதெற்க்கு முன்னெச்செரிக்கையாக கற்களால் உருகியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்துதிறக்கக்கூடியதாக உள்ள நீர் தேக்கம் .

குமிழி ஊற்று -- artesian fountain --அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரம் ஊற்று .

குமிழி -- rock cut well --நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு .

கால்வாய் --supply channel to a Tank --ஏரி, குளம் ஊரணி இவற்றிற்கு நீர் ஊட்டும் வழி .

ஆழிக்கிணறு --well in seashore --கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு .

அருவி --water falls from top of the hills -- மலை முகத்தில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது

சுட்டும் கிணறு-- dwell in well --விளை நிலத்தில் வெட்டி கல், செங்கற்கள் கொண்டு சுவர் கட்டிய கிணறு .

தெப்பக்குளம் -- temple Tank with inside pathway along parapet wall --ஆளோடியுடன் கூடிய , தெப்பம் சுற்றி வரும் குளம் .

அகழி --moat --கூடையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் .

மறு கால் -- surplus water channel -- அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால் .

குட்டம் --large pond --பெருங் குட்டை .

ஊற்று-- spring -- பூமிக்கடியிலிருந்து நீர் ஊற்றுவது

கால்வாய் -- கம்மாய்--irrigation Tank --பாண்டிய நாட்டில் ஏரிக்கு வழங்க்கும் பெயர் .

திருக்குளம் --temple Tank ---கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம் .

தாங்கல்--irrigation Tank --இப்பெயர் தொண்டை மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும் .

கேணி -- large well -- அகலமும் ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு ..

நன்றி !

1.24.2021

 

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்...


        ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ளது என்றால் நம்பமுடிகிறதா ? கிடைத்தற்கரிய பழைய நூல்களை தேடி அலையும் ஆய்வாளர்களுக்கு சரணாலயமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்குமிந்த தமிழ் நூல் காப்பகம் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் இது .

         தன வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளனர் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள் .

         அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களை சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களை சேர்த்துள்ளார் . இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரிசிஸ் அகராதி தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரைப் பல்தொகை நூல்களின் முதல் பாதிப்புகள் , தொல்காப்பியம் முதல் பாதிப்பு , கம்பராமாயணம் முதல் பதிப்பு என் ப்பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு .திருக்குறளின் அத்தனை பதிப்புகளும் இங்குள்ளன .

         மறைமலையடிகள் , மு.வ , தெ.பொ, மீ , வையாபுரி ,பாவாணர் ,, ந, சி ,கந்தையா முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான .500 க்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் ,உலகின் தலைசிறந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் , இசை குறுந்தகடுகள் என பல அரிய திரட்டுகளை கொண்டுள்ளது இந்த நூலகம் . தரைத்தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் , ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலைநயம் மிக்க கட்டடமாக திகழ்கிறது இது .

         பல்லடம் மாணிக்கம் அவர்கள் நிறங்கள் என்ற காலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளிட்டுளார் .வள்ளுவம் என்ற இதழை நடத்தியுள்ளார் . 24 இதழ்களோடு நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தக்கதாகும் ..

நன்றி !

 

பேறுகால காத்திருப்பு...


அனல் பறக்கும்
அதி வெயிலில்
மணல் துகள்களின்
தவக் கோலம் ..
பாலைவனத்தில்
கால் பாதிக்குமா
பருவமழை தூறல்கள் ?
பேறுகால காத்திருப்பு ...

 

மடையா என்ற சொல்லின் மூலமும் அந்த உண்மையான பொருளும்...



      " மடையா" என்ற சொல் நாம் அன்றடம் பயன் படுத்தும் ஒன்று . அந்த சொல்லின் உண்மையான பொருள் பலருக்கு தெரியாது . நாம் அந்த சொல்லையே இன்று வரை தவறான பொருளிலேயே பயன்படுத்தி வருகிறோம் . அந்த சொலின் உணமையான பொருள் என்ன ? அந்த சொல் எப்படி பிறந்தது ?

        ஏரியை வடிவமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேற தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம் தான் "மடை" . மடை களை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன . உறுதியான பனைமரங்களை தெரிந்தெடுத்து அதன் உள்தண்டை நீக்கம் செய்து அதனை ஏரியின் அடியாழத்தில் பத்தித்து அதன் உள் ஓட்டையில் கோரை , நாணல் , களிமண் கலந்து அடைத்து விடுவார்கள் .வெள்ளக் காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்று ஆட்கள் இருப்பார்கள் , உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கி செய்யும் சாகசப் பணியாகும் . அந்த நபர் மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பைத் திறந்து விடுவார் .மடை திறந்ததும் புயல் வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடை திறந்தவரையும் இழுத்துச் செல்லும் . மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம் , மீண்டவர்கள் குறைவு . இவர்கள் தான் "மடையர்கள் "என அழைக்கப்பட்டனர் .

       பிற்காலத்தில் காலப்போக்கில் அறிவற்ற செயல்களை செய்பவர்களை "மடையர்கள்" என்று அழைக்க தொடங்கிவிட்டனர் . மடைமை வேறு , மடையர்கள் வேறு .தமிழ் பெயர்கள் அனைத்தும் ஆழமான வேர் கொண்ட பொருள் பொதிந்த இறவா சொற்கள் . நாம் தான் அவற்றை அவற்றின் பெருமைகளை , இனிமையை , ஆழத்தை அறிய மறந்த , தெரியாத அறிவிலிகளாய் தவறான பொருளில் பயன்படுத்திக்கொண்டுள்ளோம் .

நன்றி !

12.11.2020

 பழந்தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் 


 விளாந்தர் /ஒளிக்கூண்டு  (அரிக்கன் விளக்கு )


  காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக்கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு .


அம்மி 


  குழவி கொண்டு மிளகாய் , தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல் .


அண்டா 


  அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம் .


அடுக்குப்பானை 


 ஒன்றன் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை ) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு . இதில் உப்பு , புளி , தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர் .


அடிகுழாய் 


கைபிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்த்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய் .


ஆட்டுக்கல் 


வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும் குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம் .


விரல் உறை 


தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை .


ஒட்டியாணம் 

  

  பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப்பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம் .


எந்திரம் 


( அரிசி ,உழுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ ,உடைக்கவோ பயன்படுத்தப்படும் ) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முனையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம் .இதைத் திரிகல் , திரிகை ,இயந்திரம் என்றும் கூறுவர் .


உரல் 


  வட்டவடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களை குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம் 


உரி 


பால், வெண்ணை , தயிர் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும் , உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்பு வடிவ அமைப்பு .


குஞ்சம் - குஞ்சலம் 


பெண்களின் சடையில் இனைத்துத் தொங்கவிடப்படும் , கயிற்றால் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள் .


குடுவை 


குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயனப்டுத்தும் , புடைத்த நடுப்பகுதியும் , சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற முடியும் கொண்ட கலன் .


கோகர்ணம் 


ரசம்,மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில் , ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம் .


கொடியடுப்பு 


ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு .


சுளகு 


வாய்ப்பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட ஒரு சாதனம் . தானியங்களை புடைப்பதற்கு பயன்படும் முறத்தைவிடச் சற்று நீளமான ஒரு கருவி 


தாவணி 


இளம் பெண்கள் அணியும் , ஒரு சுற்றி வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நிலைத்திருக்கும் குறைவான ஆடை 


தொடி 


பெண்கள் தோளை அடுத்த கைப்பகுதியில் அணிந்துகொள்ளும் , பிடித்தாற்போல் இருக்கும் அணிவகை 


நடைவண்டி 


குழந்தை நடைபழகுவதற்காக , நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மார்ச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விலையாட்டுச் சாதனம் .


பஞ்சமுகவாத்தியம்


கோயில்களில் பூஜையின் பொது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதற்கான பெரிய குடம் போன்ற ஒரு தாளவாத்யக் கருவி .


பாக்குவெட்டி 


சற்றுத் தட்டையான அடிப்பகுதியும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியும் கொண்ட சாதனம் . பாக்கு வெட்டுவதற்கு பயன்படும் .


பிரிமணை 


பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வாகையில் அவற்றின் அடியில் வைக்கும் பிரிகளைக் (வைக்கோல் ) கொண்டு வளையும் வளையம் போல் பின்னப்பட்ட சாதனம் .


புல்லாக்கு 


மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணிகலன் .


முறம் 


தானியங்களை புடைப்பதற்கு பயன்படும் நுனிப் பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம் .


லோட்டா 


நீர் குடிப்பதற்கான நீள உருண்டை வடிவக் குவளை 


மரப்பாச்சி 


பெண் குழந்தைகளுக்கான மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை .


இந்த பொருள்கள் எல்லாம் புழக்கத்தில் இல்லை என்ற கூறலாம் . அவற்றை எல்லாம் சேமித்து பாதுகாத்து அடுத்தடுத்து தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம் .


நன்றி !