3.25.2012


மீனவன்...!


கடற்கரையில் குடியிருப்பு ,
கடைசிவரை பரிதவிப்பு .!

கண்ணீரின் அணிவகுப்பு , 
கால்வயிற்று கஞ்சியில் களிப்பு .!

அதிகாலையில் பயணிப்பு ,
தண்ணீரின் சலசலப்பு .!

உப்புக்காற்றில் சுவாசிப்பு ,
படகுகளின் அணிவகுப்பு .!

புயல் கடல்சீற்றம் ஏற்பட்டால்
ஊதியம் இல்லா விடுப்பு .!

மாசிபங்குனியில் மீன்களின் கணக்கெடுப்பு ,
சித்திரை வைகாசியில் இவர்களுக்கு
கட்டாய விடுப்பு .!

எந்த ஆயுள் காப்பீட்டுகழகம் அளிக்கும்
இவர்களுக்கு காப்பீடு .!

தினம் தினம் உயிருக்கு போராட்டம் ,
தண்ணீரில்தான் இவர்களின் ஆட்டம்,
பாட்டம் ,கொண்டாட்டம் .!
அங்கீகரிக்கபடாத அரைக்கச்சை கூட்டம்..!!

நாள்கணக்கில் மாதகணக்கில் உழைப்பு ,
இருந்தும் வறுமையின் களிப்பு .!

இன்னல்கள் பல இருந்தும்
இருக்கத்தான் செய்கிறது கொண்டாட்டம் .!

கடல்தான் இவர்களின் வீடு
மற்றும் முதலீடு .!
கடைசிவரை போடும் சோறு .!!

தரைமேல் பிறந்து தண்ணீரில் வாழ்ந்தாலும்
கண்ணீரில் குளித்தாலும் ,
இவர்களும் மனிதர்கள் தான் .!
இறைவனின் செல்லப்பிள்ளைகள் தான் ,

விடுவுகாலம் வருமா ?
சிங்களம் விடுமா ?
சிறுத்தைகள் மீண்டும் உயிர்த்தெழுமா ?
தமிழினம் சினந்தெழுமா ?
தண்ணீரில் கொலை விழுவது தகுமா ?

தமிழன்னையே பொறும்மா .,
தக்கார் வருவார்,தகவிலார் அழிவார் ,
உன் துயர் துடைத்து எறிவார் ...

மீனவம் பேணுவோம் !
ஆணவம் விரட்டுவோம் !! 
மானுடம் போற்றுவோம் !!!