3.25.2012


மீனவன்...!


கடற்கரையில் குடியிருப்பு ,
கடைசிவரை பரிதவிப்பு .!

கண்ணீரின் அணிவகுப்பு , 
கால்வயிற்று கஞ்சியில் களிப்பு .!

அதிகாலையில் பயணிப்பு ,
தண்ணீரின் சலசலப்பு .!

உப்புக்காற்றில் சுவாசிப்பு ,
படகுகளின் அணிவகுப்பு .!

புயல் கடல்சீற்றம் ஏற்பட்டால்
ஊதியம் இல்லா விடுப்பு .!

மாசிபங்குனியில் மீன்களின் கணக்கெடுப்பு ,
சித்திரை வைகாசியில் இவர்களுக்கு
கட்டாய விடுப்பு .!

எந்த ஆயுள் காப்பீட்டுகழகம் அளிக்கும்
இவர்களுக்கு காப்பீடு .!

தினம் தினம் உயிருக்கு போராட்டம் ,
தண்ணீரில்தான் இவர்களின் ஆட்டம்,
பாட்டம் ,கொண்டாட்டம் .!
அங்கீகரிக்கபடாத அரைக்கச்சை கூட்டம்..!!

நாள்கணக்கில் மாதகணக்கில் உழைப்பு ,
இருந்தும் வறுமையின் களிப்பு .!

இன்னல்கள் பல இருந்தும்
இருக்கத்தான் செய்கிறது கொண்டாட்டம் .!

கடல்தான் இவர்களின் வீடு
மற்றும் முதலீடு .!
கடைசிவரை போடும் சோறு .!!

தரைமேல் பிறந்து தண்ணீரில் வாழ்ந்தாலும்
கண்ணீரில் குளித்தாலும் ,
இவர்களும் மனிதர்கள் தான் .!
இறைவனின் செல்லப்பிள்ளைகள் தான் ,

விடுவுகாலம் வருமா ?
சிங்களம் விடுமா ?
சிறுத்தைகள் மீண்டும் உயிர்த்தெழுமா ?
தமிழினம் சினந்தெழுமா ?
தண்ணீரில் கொலை விழுவது தகுமா ?

தமிழன்னையே பொறும்மா .,
தக்கார் வருவார்,தகவிலார் அழிவார் ,
உன் துயர் துடைத்து எறிவார் ...

மீனவம் பேணுவோம் !
ஆணவம் விரட்டுவோம் !! 
மானுடம் போற்றுவோம் !!! 

3.10.2012

உலாப்போகும் நிலாக்காலம் ..!

முற்றத்து சுற்றங்களுக்கு வணக்கம் .கவிதை புத்தகம் பிரசுரிக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு (ஐந்து ஆண்டு முயற்சி ) இந்த ஆண்டு பொங்கல் அன்று நிறைவேறியது . நேரமின்மை காரணமாக உங்களுடன் உடனடியாக பகிர்ந்து கொள்ள முடியவில்லை . புத்தகத்தின் முன் பின் அட்டையின் தோற்றத்தை உங்கள் பார்வைக்காக இணைக்கிறேன் இங்கே .. இது என் முதல் வெளியீடு . வெளியீட்டாளர் நிவேதிதா பதிப்பகம் ,s -21 ,பாலகிருஷ்ணா அடுக்ககம் ,பெரியார் பாதை ,சூளைமேடு ,வடபழனி ,சென்னை .
படித்தபின் உங்களின் மேலான கருத்துகள், குறை நிறைகளை வரவேற்கிறேன் ..
என்னுடைய blog முகவரி http ;//vasikarapriyan .com ,
என்னுடைய face book முகவரி sivakumar ganesan ,வலைமுகவரி andiessiva @ rediffmail .com .
பின்குறிப்பு . நிலா அவர்களுக்கு ,
இந்த செய்தியை எந்த பகுதியில் சேர்க்கவேண்டுமோ அங்கே சேர்த்துவிடவும் .படங்களை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை . தெரிந்தவர்கள் உதவவும்

3.04.2012

பெண் ..!


திருமணத்தின் மூலம் உறவாகி , 
சித்திரையில் வாரா நித்திரையால் , 
கைபிடித்த கணவன் அளித்த 
லட்சத்து சொச்ச வித்ததினால், 
வேதனையை தனதாக்கி , 
இன்பத்தை பொதுவுடமையாக்கி , 
திரவத்தை திடமாக்கி , 
உணர்ச்சியை உயிராக்கி , 
உதிரத்தை உணவாக்கி , 
வயிற்றை உறவிடமாக்கி , 
உலகமஹா அறிவியலையே உருவாக்கி , 

ஓர் உயிரில் ஓர் உயிரை உருவாக்கி , 
ஒன்பது மாதத்தில் உருவத்தையும் உருவாக்கி, 
துன்பத்தையும் துயரத்தையும் தனதாக்கி, 
தனக்கும் தன்னை சார்ந்தவருக்கும் 
பெருமையையும் பொறுமையையும் உருவாக்கி , 
உவகையையும் மழலையாக்குவாள், 
மனைவி எனும் உன்னதமான பெண் .! 

தாயாகி தங்கையாகி குடும்ப தலைவியாகி , 
மாமியாராகி மைத்துனி யாகி 
அண்ணியாகி அக்காள், மகளாகி 
ஆயிரம் உருவம் எடுத்து வந்தாலும் 
அமைதியான சுமைதாங்கி 
அவளே அல்லவா ...