1.27.2012

கடிகாரம் ..!


கையின் மணியாரம்,
மணிகாட்டு, சுவர், மரப்பெட்டி,
இவன் வசிக்கும் ஊராம் !
கண்ணுடன் அவ்வப்பொழுது
நேர்கோட்டில் புரியும்
பனிப் போராம் ..!!
சிறியமுள் பெரியமுள் என்று
இரண்டு பேராம் .!
காதலித்து கைப்பிடித்தவர்கள்
இவர்கள் தானாம் .!!
ஊடல் கூடல் எல்லாம்
இவர்களின் பொழுதுபோக்கு தானாம் !!!

காதலியவள் மணிக்கு
ஒருமுறை அசையும்
திருவாரூர் தேராம் !
கைப்பிடித்தவன் கடமையாற்ற
கடைசிவரை ஓடும்
இதயத்துடிப்பு போலாம் .!!

நொடிமுள் ! இது இவர்கள்
ஈன்ற குழந்தையின் பேராம் !!
இவன் ஓடும் வேகத்தில்
தந்தையைவிட அறுபது மடங்கு
கூடுதல் தானாம் !!!
இருவரும் இணையும் போது
மணி ஈராறாம் !
அரை நிமிட கூடல் ,
ஆடல்! பாடல்!! அதன் பின்
மோதல் !!! சினம் கொண்டு
அறுபத்து நான்கு நிமிட ஊடல் .!!!!
பின்பு அரை நொடியில் காணாமல்
போகும் அதிசயம் பாரும் !!!!

ஆறில் ஈராரையில் வரும்போதும் ,
ஒன்பதே முக்காலைத் தொடும் போதும் ,
மூணே முக்காலில் கண்படும் போதும் ,
இவர்கள் நேருக்கு நேர்
முகம் காணல் !
சற்று நேரம் நாணத்தில்
இருவரும் பாரும் !!
இவர்கள் பெயர் தான்
கடிகாரம்!!! கடிகாரம் .!!!

வசிகரப்ரியன்.க

1.17.2012

அகவை எழுபது ..!


என் தந்தையாரின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு (16 -12 -2011 ) அன்று என் பெற்றோரை பற்றி எழுதிய கவிதை உங்கள் பார்வைக்காக இதோ ..

அப்பாவுக்கு ..!
அகவை எழுபது !
மகவை ஈன்ற பொழுதிலிருந்து
கடந்து வந்த பாதையை
திரும்பிப் பார்கையில்
உண்மை வலியது
என்பது ஓங்கி ஒலிக்குது .!!

அனுபவ சுவைகளை
அனுபவித்த ரேகைகள்
முகத்தில் தெரியுது !
உவகை புரியுது !!

நிதானம் பேசுது !
நீதி நேர்மை - நீ
கடைபிடித்த வாய்மை
வெளியில் பேசுவது
வளியில் கேட்குது !!

திருமண மாகி
இருமனமும் ஒருமனமாகி
ஆகிறது அகவை
நாற்பத்து ஆறு !

நீங்கள் வாழ்வாங்கு வாழ
ஆயுட்காரகனே வந்து
பிணி களைந்து
பணிவிடை செய்து
சிவனிடம் கேட்பாரு !
அவன் மகனிடம்
காணிக்கை இல்லாமல்
கோரிக்கை வைப்பாரு !!

ஆனை முகத்தானிடம்
பேருவகை அளிக்க
பெருமையோடு பரிந்துரைப்பாரு.!
மகிழ்ச்சியை மட்டுமே
பகிர்ந தளிப்பாரு.!!

வீழ்த்த மனமில்லாமல்
எருமை வாகனரே
வாழ்த்த வருவாரு !
வளமை தருவாரு !!

மங்கள இசையில்
வெண்கல குரலில்
கண்கள் ஒளிர
எங்கள் உணர்வில்
வாழ்வாங்கு வாழ
வாழ்த்துப் பண்கள் பாடி
ஒரு மாமாங்கம்
பூஜை செய்வாரு .!
நீங்க பல்லாண்டு பல்லாண்டு
வாழ்வாங்கு வாழ
வகை வகையாய்
வாழ்த்திப் போவாரு !!

1.08.2012

வதந்தி ..!



கொடுத்த வனுக்கே
வந்து சேரும் .!
வழியில் வருவோரெல்லாம்
வாயால் மெல்ல நேரும் !!

புழுதி சுமப்பது .!
சில சமயம்
அவதூறை கிளப்பிப் போகும் .!!
பல சமயம்
பழிபாவம் வந்து சேரும் .!!!

உதடு உதிர்க்கும்
காட்டுத் தீ .!
இதில் உண்மை இல்லை ..
உணர்ந்து கொள் நீ ..!!

போய்வந்த பாதையின்
அடிச்சுவடு இல்லை !
வரையறை என்னும்
அரிச்சுவடும் இல்லை .!!


வசிகரப்ரியன்


1.07.2012

தலைமுடி ..!

உயரத்தில் இவன் குடியிருப்பு ,
உதிர்ந்தபின் இல்லை மதிப்பு ,
தலையில் இருக்கும் வரை
அப்படி ஒரு கவனிப்பு ,
தவறி உணவில் விழுந்தால்
அப்பப்பா ! என்ன ஒரு சலிப்பு ...!

இவனுக்கு இல்லை மறுபிறப்பு ..!
இன்றுவரை யாரும் முடிக்கவில்லை
இவர்களின் கணக்கெடுப்பு ..!!
உள்ளவரை தலைக்கு
அழகான கரும்பொன் காப்பு ...!!!
உலர்ந்து உதிர்ந்தபின் மனிதன்
உள்ளாகிறான் பரிகாசிப்புக்கு ..!!!!

பெண்ணின் அழகுக்கு வேண்டும்
இவன் அருள்பாலிப்பு .!
மனமிருந்தால் கொடுக்கலாம்
சிறப்பு பாதுகாப்பு .!!
மணமில்லை என்பது
இவனின் தனிச்சிறப்பு ..!!!

இளமையில் இவன்
நிறமோ கருப்பு .!
நடுதர வயதில் மாற்றங்களால்
வரும் வெளுப்பு ..!!
இவனை வைத்து
கொலையாளியை பிடிக்கலாம் என்பது
அறிவியலின் கண்டுபிடிப்பு ..!!!

மொத்தத்தில் இவனை
பேணிகாப்பது என்பது
நம் பொறுப்பு .!
இருப்பதை விட்டு
இழந்தபின் புலம்புவது என்பது
பொறுப்பற்ற பிழைப்பு ..!!

வசிகரப்ரியன்.க

1.06.2012

வெண்குழல் புகை (சிகரெட் )..!

கொட்டை வடிநீர் நிற மேனி !
தட்டை வடிவான
வெள்ளை சட்டை உடுத்தி ,
கட்டழகன் அவன்
கைவிரல்களை கட்டிப்பிடித்து ,
வட்ட வடிவான முகத்தின்
நட்ட நடுவான இடத்தின் ,

கிட்ட குழித்து
எட்ட குவியும் இதழுடன்
ஒட்டி உறவாடி,
எள்ளி நகையாடி ,
வாயில் நாவில் சுவையாடி,
வஞ்சம் கொஞ்சம் மறக்க
கொஞ்சம் கொஞ்சமாய்
நஞ்சை பரப்பும் ,

பஞ்சு நிறத்தில்
மூச்சில் நடமாடி ,
வாயில் பேச்சில் விளையாடி ,
மூக்கின் வழியே
காற்றில் கலக்கும் ,
புண்பட்டார் நெஞ்சை
புகை கொண்டு ஆற்றும் ,
வெண்மை நிற புகையே ..!!

உன்மீது,
இன்முகம் கொண்ட
இளைய தலைமுறைக்கு
இத்தனை பாசம் ஏன் ??
சுருள் அலை வடிவில்
இருந்து கொண்டு
பெரும் வல்லமை படைத்த
அறிய மானுடத்தை
உரு தெரியாமல் ஆக்கி
தெரு தெருவை சுற்ற விடுகிறாயே ???
உன்பெயர்தான் சிகரெட்டா ???
இதுதான் உந்தன் சீக்ரெட்டா ???

வசிகரன்.க

புது விசை: வீடுகள் அங்கேயே இருக்கின்றன

புது விசை: வீடுகள் அங்கேயே இருக்கின்றன