என்னுடைய கவிதைகள் , கட்டுரைகள் , சிறுகதைகள் , நாவல்கள் உங்களுக்காக . உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன . பிடித்திருந்தால் , நீங்கள் விரும்பினால் உங்களுடைய நண்பர்களுக்கும் இந்த blog ஐ பரிந்துரை செய்யவும் . தமிழ் மண்ணின் மனம், பழமை , கலை , இலக்கியம் பற்றி அலசும் , ஆராயும் , பகிரும் தளம் இது .
9.21.2014
குட்டிக்கனவுகள் பகுதி - 1
குடைக்குள் குழந்தை !
மழைக்கு வருத்தம் :
முத்தம் கொடுக்க முடியவில்லையே :
முகத்தைப் பார்க்கமுடியவில்லையே என்று .
குடைக்கோ மகிழ்ச்சி :
மொத்தமும் தன்னோடு என்பதால்..
யுத்தம் தொடர்கிறது ...
இன்னும் கனவு காண்போம் .,
அரிது அரிது ...!
அரிது அரிது
அரிது ! அரிது!
இவை எல்லாம்
காண்பது அரிது !
இமைக்காத மனிதன் ,
இளைக்காத நிலவு
களிக்காத உறவு !
சலியாத மனது
இனிக்காத மழலை
உழைக்காத எறும்பு
குறைக்காத நாய் !
அழுவாத மேகம்
அது இல்லாத வானம்
அக்னி இல்லாத யாகம் !
உதிராத மலர்
உறையாத உதிரம்
ஓடாத முயல்
நீந்தாத கயல் !
வளையாத நாணல்
கொட்டும் மழைக்குப்பின்
குரலெழுப்பாத நுணல் !
வெள்ளாமை விளையும்
கடல் மணல் !
இரவில் வளம் வரும்
சிவப்பு சூரியன் !
நிறைவான நினைவுகொண்ட
தெளிவான காரிகை !
கரையாத கழியாத
சிலையான நாழிகை !
கேலி செய்யாத தோழிகள்
ஊழி செய்யாத மானுடம்
தாய்மையை விரும்பாத பெண்மை !
ஏழ்மையை விரும்பும் ஆண்மை !
மேடு நோக்கிப்
பயணிக்கும் நதி !
குறைகளே இல்லாத
மனிதப் பிறவி !
குறை காணாத சுற்றம் !
அரிது ! அரிது !
இவை எல்லாம்
காண்பது அரிது !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)