11.03.2013

தீபாவளி ...!


தீபாவளி ..! 
தீயாய் வளி ! 
தீராத வலி 
நீல நீள மகளுக்கு ! 
கரு மேக பெரு மகளின் 
இரு மாத கற்பம் 
சிறு பொழுதில் கலைந்திட
 வரும் வழியில் 
பல நூறு நீர்த்துளிகள் ! 
கரும்புகைப் புளி 
வானில் கரைத்த 
வானர மழலைகள் ... 

சிறுதிரை முன்னால் 
பெருசுகள் அவை ஈன்ற 
சிறுசுகள் சினிமா தனமாய் ... 
தீபாவளியின் பொருள் புரியாமல் 
பொழுதைக் கொல்ல 
அழுது புலம்பினாள் 
நிலா மகள் உடன் 
நில மகளும் ! 

திருந்து மானிடா ! 
தீபாவளின் பொருள் உணர்ந்து 
சிறார்களுக்கு உணர்த்து ! 
சின்னத் திரையையும் 
வண்ணத் திரையையும் 
மெல்ல ஒதுக்கி 
நல்ல சமுதாயம் வளர 
திண்ணமாய் உரமிடு ! 
அதை தினம் தினம் வளர்த்திடு !