10.27.2013

அம்மா ....!


அம்மா ....! 

தொப்புழ்கொடி உறவு !
தூய்மையான அன்பின்
அகராதி விளக்கம் !

உன்னத உறவு !
உண்மையில் உதிரம்
உறையும் வரை
தொடரும் அழகு !

அம்மா ..! 

உன்னைப் பற்றிய
உணர்வு ! உயிர்
இருக்கும் வரை
உறையாது அந்த
நினைவு !

அம்மா ...! 

உன்னைப் பற்றி
சும்மாவேணும் நினைத்தாலும்
வருது புதுப் புதுக் கவிதை ! 

பைலின் புயல் !

பைலின் புயல் !
வயலின் வாசிக்க ,
வயலுக்கெல்லாம் வலியில்  
 விழிகள் வலிக்க ,
நீர் தொண்டைக்குழிகளை நிறைக்க ,
இறைவனை உதவிக்கு விளிக்க,
சூரியனோ காரியமின்றி
ஓர் அகத்தில் ,ஒளிந்திருக்க,
ஒளி இழந்திருக்கு ,
 ஒலி செவியை பிளந்தெடுக்க ,
நம் அரசியல்வாதிகள்
அடிக்கலாம்  இன்னொரு
கொள்ளை என்று மகிழ்ந்திருக்க ,
பாவம் ! திருவாளர் பொது ஜனமோ ,
பிழைப்புக்கு வழியென்ன
என்ற குழப்பத்தில் !
நடந்ததென்ன ! நடப்பதென்ன !!
நடக்க இருப்பதென்ன !!!
ஒன்றும் புரியாமல் உழன்றுகொண்டு .

ஏழைகள் ஏழைகளாக இருப்பதன்
ரகசியமே இதுதானே...
இந்தியா என்றாலே ,
அதுதானே... என்ற
குமட்டும் நினைவுடன்
வளியின் தலைவன்
விழியில் ஈரத்துடன்
தன வினையை எண்ணி
வருத்தக் குடைப் பிடித்து
நமது துன்பங்களை எடைபிடித்து
மனம் துடிக்க நெஞ்சம் புடைக்க ,
நஞ்சு குடித்தவன் போல்
இங்கும் அங்கும் நடந்து
பிதற்றிக் கொண்டிருந்தான் .!