தீபாவளி ..!
தீயாய் வளி !
தீராத வலி
நீல நீள மகளுக்கு !
கரு மேக பெரு மகளின்
இரு மாத கற்பம்
சிறு பொழுதில் கலைந்திட
வரும் வழியில்
பல நூறு நீர்த்துளிகள் !
கரும்புகைப் புளி
வானில் கரைத்த
வானர மழலைகள் ...
சிறுதிரை முன்னால்
பெருசுகள் அவை ஈன்ற
சிறுசுகள் சினிமா தனமாய் ...
தீபாவளியின் பொருள் புரியாமல்
பொழுதைக் கொல்ல
அழுது புலம்பினாள்
நிலா மகள் உடன்
நில மகளும் !
திருந்து மானிடா !
தீபாவளின் பொருள் உணர்ந்து
சிறார்களுக்கு உணர்த்து !
சின்னத் திரையையும்
வண்ணத் திரையையும்
மெல்ல ஒதுக்கி
நல்ல சமுதாயம் வளர
திண்ணமாய் உரமிடு !
அதை தினம் தினம் வளர்த்திடு !