4.16.2012

சர்வர் பையன் ..!

 

ஆடி களிக்க வேண்டிய வயதில்
பசியை விரட்ட ,
பணத்தை தேடி ,
பட்டணத்துக்கு ஓடி ,
இளமை ஆசைகளை துறந்து ,
மேசை துடைத்து ,
தோசை படைத்தது -வெறும்
சம்பாஷணைகளுக்கு தலை
அசைக்கும் இளம்தளிர்
சர்வர் பையன் இவன்..!

சரித்திரம் படிக்கவேண்டிய வயதில்
தரித்திரம் மிரட்ட
மனதை மறந்து
தினத்தை விரட்டி
தனத்தை தேடும்
இந்தியாவின் எதிர்காலம் ..!

பொத்தைக்குள் கால் சட்டை .!
அதற்குள் அந்த அதிர்ஷ்ட கட்டை..!
கால்சட்டைக்குள் மட்டும்
பொத்தைகள் இல்லை !
இவன் எதிர் கால
கனவு பாதையிலும் தான்.!

ஆள்பவர்களே .!
ஒரு நிமிடம் கேளும்..!
என்ன இந்த பாழ்மக்கள்
செய்த பாவம் ?
என்றாவது தீருமா இவர்களது
ஏழ்மை தாகம் ??

படைத்தவனே..!
கண் திறந்து பாரும் !
இப்பாழ்மக்கள் செய்த பாவம்
எப்போது தீரும் ??
இவர்கள் மேல் உனக்கு
ஏன் எப்போதும்
ஒருதலை ராகம் ???

நீயும் ஏழையாக ஒருமுறை
பிறந்து பாரும் ! உண்மையில்
உன்படைப்பில் நிகழாது
இத்தவறு பின் எப்போதும்...!


2010- ஆண்டு சென்னை-க்கு சென்ற பொது ஒரு உணவு விடுதில் உணவு பரிமாறிய இளம் சிறுவனிடம் பேச்சு கொடுத்தபொது அவன் ஆசைகளை , கனவுகளை என்னால் உணரமுடிந்தது. அதன் வெளிபாடே இந்த கவிதை.! உள்ளத்தில் வந்தமர்ந்த பாரத்தை என்விழி எழுதுகோல் வழி இறக்கிய முயற்சி இது ..!