திருமணத்தின் மூலம் உறவாகி ,
சித்திரையில் வாரா நித்திரையால் ,
கைபிடித்த கணவன் அளித்த
லட்சத்து சொச்ச வித்ததினால்,
வேதனையை தனதாக்கி ,
இன்பத்தை பொதுவுடமையாக்கி ,
திரவத்தை திடமாக்கி ,
உணர்ச்சியை உயிராக்கி ,
உதிரத்தை உணவாக்கி ,
வயிற்றை உறவிடமாக்கி ,
உலகமஹா அறிவியலையே உருவாக்கி ,
ஓர் உயிரில் ஓர் உயிரை உருவாக்கி ,
ஒன்பது மாதத்தில் உருவத்தையும் உருவாக்கி,
துன்பத்தையும் துயரத்தையும் தனதாக்கி,
தனக்கும் தன்னை சார்ந்தவருக்கும்
பெருமையையும் பொறுமையையும் உருவாக்கி ,
உவகையையும் மழலையாக்குவாள்,
மனைவி எனும் உன்னதமான பெண் .!
தாயாகி தங்கையாகி குடும்ப தலைவியாகி ,
மாமியாராகி மைத்துனி யாகி
அண்ணியாகி அக்காள், மகளாகி
ஆயிரம் உருவம் எடுத்து வந்தாலும்
அமைதியான சுமைதாங்கி
அவளே அல்லவா ...