3.04.2012

பெண் ..!


திருமணத்தின் மூலம் உறவாகி , 
சித்திரையில் வாரா நித்திரையால் , 
கைபிடித்த கணவன் அளித்த 
லட்சத்து சொச்ச வித்ததினால், 
வேதனையை தனதாக்கி , 
இன்பத்தை பொதுவுடமையாக்கி , 
திரவத்தை திடமாக்கி , 
உணர்ச்சியை உயிராக்கி , 
உதிரத்தை உணவாக்கி , 
வயிற்றை உறவிடமாக்கி , 
உலகமஹா அறிவியலையே உருவாக்கி , 

ஓர் உயிரில் ஓர் உயிரை உருவாக்கி , 
ஒன்பது மாதத்தில் உருவத்தையும் உருவாக்கி, 
துன்பத்தையும் துயரத்தையும் தனதாக்கி, 
தனக்கும் தன்னை சார்ந்தவருக்கும் 
பெருமையையும் பொறுமையையும் உருவாக்கி , 
உவகையையும் மழலையாக்குவாள், 
மனைவி எனும் உன்னதமான பெண் .! 

தாயாகி தங்கையாகி குடும்ப தலைவியாகி , 
மாமியாராகி மைத்துனி யாகி 
அண்ணியாகி அக்காள், மகளாகி 
ஆயிரம் உருவம் எடுத்து வந்தாலும் 
அமைதியான சுமைதாங்கி 
அவளே அல்லவா ...