2.28.2012

நாக்கு..! நாக்கு ..!!

நீருக்குள் ஜலசமாதி !
நினைத்த உடனே ,
வெளியில் வரும்
உடலின் பாதி !!
எலும்பிலா ஜாதி !!!
எளிதில் உணர்ச்சி
வயப்படும் வியாதி !!!!

வாயில் வசிக்கும் ,
உமிழ் நீரில் இருக்கும் ,
பிறர் உணர்வை
பல சமயம் சிதைக்கும் !
சொல்லம்பு தொடுக்கும்
ஐம்புலன்களில் ஒன்று !!

பற்கள் காவலிருக்க - சுவை
முட்கள் மேலிருக்க ,
சொற்களை அள்ளிதெளிக்கும்,
உணவை அரைக்க உதவிநிற்கும்
திணவு முதலை !

பற்களுக்கு வெளியே வந்து
கொட்டும் குளவி !
இதை எப்படி கட்டுபடுத்துவது?
இதுதான் மனிதனின் கவலை !
கட்டுப்பாட்டில் வைத்திருந்தால்
இது கனவிலும் கவிதை !!

தடுப்பணை தகர்ந்தால் - இது
உணர்வுள்ள விதவை !
ஊழிசெய்ய காத்திருக்கும்
உயருள்ள மிதவை !!

காவலிருக்கும் பற்களை
கடைக்கண்ணால் ஏமாற்றிவிட்டு ,
இரத்தமின்றி சத்தமின்றி
காயப்படுத்தும் வித்தை கொண்ட
உடலின் உணர்வு அணிகலன் !

இயற்க்கை தந்த சாதனம் !
இனிய தமிழ் பேசிடும் !!
உறைக்குள்ளே புகலிடம் !!!
உண்மையில் இருட்டறையில்
என்றும் உறைவிடம் !

கண்ணிலும் நீர், நாவிலும் நீர்
இரண்டுமே சக்தி வாய்ந்தது !
கண்ணைவிட்டு நீர் வெளியே
நீரை விட்டு நா வெளியே !!
விளைவு ! விபத்துதான் !!!

கண்ணீர் உவர்ப்புத்தான் !
உமிழ் நீர் செரிப்புக்குத்தான் !!
தவறாக பயன்படுத்தும் போது
இரு நீராலும் எஞ்சுவது
மனிதனுக்கு தவிப்புத்தான் !!!