2.15.2012

அரசியல்வாதிகள்...!

ஆற்றில் வலைவிரித்து,,
நிலவில் மீன்பிடித்து,
ஆகாயத்தில் உலரவைத்து,
சேற்றில் தீ மூட்டி,
நாற்றில் சமைத்து ,
காற்றில் பரிமாறும்
கலியுக கயவர்கள்.!

வயிற்றில் தினவுற்று ,
வாயில் மடைபோல்
சொல் எனும் ஊற்றெடுத்து ,
கயிற்றில் பால்கறந்து ,
நாரில் உறையவைத்து ,
வேரில் வெண்ணை எடுத்து,
பனைவாரில் பதபடுத்தி,
தினம் யார் யாருக்கோ
விற்பனை செய்யும்
வாய்சொல் விற்பன்னர்கள்..!


கானல் நீரைத் தேக்கி ,
காகித பூ கொண்டு ,
வானில் அணை கட்டும்,
விண்மீன் களுக்கிடையே,
நெல்மணி அது கொண்டு ,
செல் வழி பாலம் ,
சொல்லின் வழி அமைக்கும்,
நல்வழியில் நடப்போரை
வானுலகம் அனுப்பிவிட்டு,
ஏதேதோ செய்து,
எப்படியும் பொருள்சேர்க்கும்
அருள் வழி மறந்த
புனித ஆத்மாக்கள் ..!

கொசுவலை உடன் சென்று ,
பசுவின் சிசு அது கொண்டு ,
எலியின் வலையில் பதுங்கி,
புலி வேட்டையாடும்
பூவுலக மாக்கள்.!

வன்மனம் கொண்டு ,
தினம் ஒரு பூவின் மணம் நாடும்,
ஏழையின் மனவலியில்
பொருள் இல்லில்
துன்ப உழலில்
குளிர் காயும்
மண்ணுலக எமன்கள்..!