1.27.2012

கடிகாரம் ..!


கையின் மணியாரம்,
மணிகாட்டு, சுவர், மரப்பெட்டி,
இவன் வசிக்கும் ஊராம் !
கண்ணுடன் அவ்வப்பொழுது
நேர்கோட்டில் புரியும்
பனிப் போராம் ..!!
சிறியமுள் பெரியமுள் என்று
இரண்டு பேராம் .!
காதலித்து கைப்பிடித்தவர்கள்
இவர்கள் தானாம் .!!
ஊடல் கூடல் எல்லாம்
இவர்களின் பொழுதுபோக்கு தானாம் !!!

காதலியவள் மணிக்கு
ஒருமுறை அசையும்
திருவாரூர் தேராம் !
கைப்பிடித்தவன் கடமையாற்ற
கடைசிவரை ஓடும்
இதயத்துடிப்பு போலாம் .!!

நொடிமுள் ! இது இவர்கள்
ஈன்ற குழந்தையின் பேராம் !!
இவன் ஓடும் வேகத்தில்
தந்தையைவிட அறுபது மடங்கு
கூடுதல் தானாம் !!!
இருவரும் இணையும் போது
மணி ஈராறாம் !
அரை நிமிட கூடல் ,
ஆடல்! பாடல்!! அதன் பின்
மோதல் !!! சினம் கொண்டு
அறுபத்து நான்கு நிமிட ஊடல் .!!!!
பின்பு அரை நொடியில் காணாமல்
போகும் அதிசயம் பாரும் !!!!

ஆறில் ஈராரையில் வரும்போதும் ,
ஒன்பதே முக்காலைத் தொடும் போதும் ,
மூணே முக்காலில் கண்படும் போதும் ,
இவர்கள் நேருக்கு நேர்
முகம் காணல் !
சற்று நேரம் நாணத்தில்
இருவரும் பாரும் !!
இவர்கள் பெயர் தான்
கடிகாரம்!!! கடிகாரம் .!!!

வசிகரப்ரியன்.க