1.17.2012

அகவை எழுபது ..!


என் தந்தையாரின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு (16 -12 -2011 ) அன்று என் பெற்றோரை பற்றி எழுதிய கவிதை உங்கள் பார்வைக்காக இதோ ..

அப்பாவுக்கு ..!
அகவை எழுபது !
மகவை ஈன்ற பொழுதிலிருந்து
கடந்து வந்த பாதையை
திரும்பிப் பார்கையில்
உண்மை வலியது
என்பது ஓங்கி ஒலிக்குது .!!

அனுபவ சுவைகளை
அனுபவித்த ரேகைகள்
முகத்தில் தெரியுது !
உவகை புரியுது !!

நிதானம் பேசுது !
நீதி நேர்மை - நீ
கடைபிடித்த வாய்மை
வெளியில் பேசுவது
வளியில் கேட்குது !!

திருமண மாகி
இருமனமும் ஒருமனமாகி
ஆகிறது அகவை
நாற்பத்து ஆறு !

நீங்கள் வாழ்வாங்கு வாழ
ஆயுட்காரகனே வந்து
பிணி களைந்து
பணிவிடை செய்து
சிவனிடம் கேட்பாரு !
அவன் மகனிடம்
காணிக்கை இல்லாமல்
கோரிக்கை வைப்பாரு !!

ஆனை முகத்தானிடம்
பேருவகை அளிக்க
பெருமையோடு பரிந்துரைப்பாரு.!
மகிழ்ச்சியை மட்டுமே
பகிர்ந தளிப்பாரு.!!

வீழ்த்த மனமில்லாமல்
எருமை வாகனரே
வாழ்த்த வருவாரு !
வளமை தருவாரு !!

மங்கள இசையில்
வெண்கல குரலில்
கண்கள் ஒளிர
எங்கள் உணர்வில்
வாழ்வாங்கு வாழ
வாழ்த்துப் பண்கள் பாடி
ஒரு மாமாங்கம்
பூஜை செய்வாரு .!
நீங்க பல்லாண்டு பல்லாண்டு
வாழ்வாங்கு வாழ
வகை வகையாய்
வாழ்த்திப் போவாரு !!