9.19.2012

அடடா ..! பகுதி -1

நிலா அபகரிப்பு வழக்கு !
சூரியமன்றதில் 
அமாவாசையன்று ...

நில மகளுக்கும் 
விவசாயிக்கும் 
விவாகரத்து !
அடுக்குமாடி குடியிருப்பு 
கட்டி முடிப்பு ..

பருவமழைக்காக 
சிறப்பு வேண்டுதல் !
தலையை மழித்துக்கொண்ட 
மரங்கள் ..
இலையுதிர்காலம் தொடக்கம் !

இன்னும் படரும் ...

9.12.2012

ஏதோ நினைவுகளில் ...



ஆறு ஆண்டு காலம் 
எனக்கு வனவாசம் ! 
அதில் ஜானவசமும் 
இருந்தது ! 
சுகவாசமும் இருந்தது ! 

மோசமான காலமும் 
இருந்தது ! 
மோதிரக்கையால் குட்டுபட்ட 
படலமும் நடந்தது. 

ஆழமான நட்பையும் 
உணர்ந்தேன்! 
அடுத்து கெடுக்கும் 
கெடுத்தே வயிறு வளர்க்கும் 
வினோத ஜந்துக்களையும் 
பார்க்க நேர்ந்தது. 

சொல்பேச்சு கேட்ட, 
சமயத்தில் குறைநிறைகளை 
தரமகுறையாமல் எடுத்து சொன்ன , 
உறவுகளை உணர்வுகளை 
பெற்று இருந்தேன் 
என் குழுவில் என்பது 
பேரின்பம் தானே ! 

மனநிறைவோடு மீண்டும் 
மீண்டும் சிந்திப்போம் 
என்ற உள்ளுணர்வோடு ...